பயணம் ஓர் இரவினில் | தொ – 01

அன்பை தொலைத்தேன்

தோள் சாய தோழி இல்லை..

நட்பை தொலைத்தேன்

தோள் கொடுக்க தோழனும் இல்லை..

 உறவையும் தொலைத்தேன்

உறவாட உறவுகளும் இல்லை..

வார்த்தையும் இல்லை

வாழ்தலில் அர்த்தமும் இல்லை..

இறக்கி வைத்திருப்பேன்

சுமைகள் முதுகில் இருந்திருந்தால்

ஆனால் நெஞ்சினில்??

நெஞ்சில் வலிகளோடு ஒரு பயணம்..

 

வாகனம் செல்லும் வேகம் – என்

மனம் செல்ல மறுக்கின்றது..

தென்றல் வந்து தீண்டிய போதும்

உடல் சிலிர்க்கவில்லை..

இழந்ததை மட்டும் என் மனம்

தேடி அலைகிறது..

நான் எங்கே சென்றாலும் – அங்கேயும்

வருகின்றாள்!!!

மறக்க நினைத்தாலும் மனதில் இருந்து

விலக மறுக்கின்றாள்!!!

 

நான் விரும்பியதோ

நீண்டதொரு பயணம் – அழகிய இரவினில்

என்னவள் அருகினில்,

அவளின் சுவாசம் – என்னை மயக்க

தென்றலின் கீதம் – என்னை சிலிர்க்க

சிறு ஓசைகளில் இசை வந்து என் உடல் தீண்ட…

 

ஆனால் இன்று

இவை அனைத்தும் என்னோடு

அவள் மட்டும் என் நினைவோடு

ரசிகனாக இருந்தும் ரசிக்கவில்லை

மனிதனாக இருந்தும் சிலிர்க்கவில்லை

தீண்டிய இசையை உணரமுடியவில்லை

அவள் என்னருகில் இல்லை என்பதாலோ??

                                                                             — பயணம் தொடரும்